ஆர்த்தியின் சகோதரர் “எங்களுக்கும் ஓட்டுநர்
முசாபிரைப் பாராட்டிய சிபிஎம் எம்.பி., ஏ.ஏ.ரஹீம்
“எனக்கு காஷ்மீரில் இரண்டு சகோதரர்கள் உள்ளனர், முசா பிர் மற்றும் சமீர்!.. அல்லாஹ் அவர்களைப் பாதுகாக்கட்டும்”.... பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தி யின் நெகிழ்ச்சியான வார்த்தைகள் மூலம் அறிமுகமான முசாபிரை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து பாராட்டினர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு தல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலின் பின்னணியில், சிபிஎம் பொதுச் செய லாளர் எம்.ஏ.பேபி தலைமையிலான குழு காஷ்மீருக்குச் சென்றுள்ளது. சிபிஎம் தூதுக்குழுவின் வாகன ஓட்டி யாக முசாபிர் உள்ளார். ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வெளியே முசாபி ருடன் நாடாளுமன்றக் குழு தலைவர் கே.ராதாகிருஷ்ணனும் தானும் இருக்கும் படத்தை ஏ.ஏ.ரஹீம் முக நூலில் பகிர்ந்துள்ளார். மதத்தின் அடிப்படையில் அப்பாவி மக்களை குறிவைக்கும் மத பயங்கர வாதத்திற்கு முன்னால் தலை வணங்காத மக்கள். முசாபிரை அரவணைத்துப் பாராட்டும் படத்தை ‘எமது சகோதரருடன்’ என்ற தலைப்புடன் ரஹீம் பகிர்ந்துள் ளார். எங்கள் வாகனத் தொடரணியில் உள்ள ஒரு வாகனம் முசாபிருக்குச் சொந்தமானது என்றும், உண்மையில் முசாபிர் மற்றும் சமீர் போன்ற பல காஷ்மீர் சகோதரர்கள் முன்பு பயங்கர வாதம் தோற்கடிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குத லை நேரில் கண்ட சாட்சியான ஆர்த்தி, சம்பவ இடத்தில் வைத்து கூறுகையில், ‘என் தந்தை காஷ்மீர் மண்ணில் என் கண்களுக்கு முன்பாக விழுந்தார். அந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை எதுவும் ஈடுசெய்ய முடியாது. ஆனால் அதே நிலம் எனக்கு இரண்டு உடன் பிறப்புகளை - முசாபிர் மற்றும் சமீர் ஆகியோரைக் கொடுத்தது. படு கொலை காரணமாக முழுப் பகுதியும் பயத்தில் இருந்தபோது, காஷ்மீரைச் சேர்ந்த அந்த இரண்டு இளம் முஸ்லிம் ஓட்டுநர்கள்தான் உதவிக்காக ஓடி வந்தார்கள். அதை குறிப்பிட்ட ஆர்த்தி, எனக்கு இடப்பக்கமும் வலப்பக்கமுமாக பாது காத்து நின்றனர். பிணவறையில் என் தந்தை அடையாளம் காணப்படுவ தற்கும் பிற விசயங்களுக்காகவும் அதி காலை 3 மணி வரை அங்கேயே இருந்த னர். “அவர்கள் ஒரு தங்கையைப் போல இடதும் வலதுமாக என்னோடு காத்தி ருந்தார்கள்,” என்று கூறினார். இருப்பி னும், ஆர்த்தியின் நேர்மையான வார்த்தைகளுக்கு எதிராக கேரளா உட்பட நாடு முழுவதும் பரவலான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தாக்கு தலுக்குப் பிறகு நாடு கண்ட மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்தது. பள்ளத் தாக்கின் அழகிய காட்சிகளை ரசிக்க வந்த மக்களை பயங்கரவாதிகள் சுட்டதில் சில நொடிகளில் 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பி டத்தக்கது.